Friday, June 23, 2006

அரோவானா மீனாக்ஷி

Posted by Picasa மீனாட்சி என்று பெயர் சூட்டிக்கொண்ட இந்த அரோவானா வகை fஃரண்ட் எங்க வீட்டுக்கு வந்து 4 வருடம் ஆகிறது. 4 இன்ச் அளவில் அவள்/அவன் வந்த போது
எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்.எவ்வளவு நாள் வாழ்வோ என்று.
ஏனெனில் அப்போது எங்கள் வீட்டுக்கு திடீர் மீனயோகம் அடிக்கும் வருடம்.
மீன்கள் வரும், நீந்துவதற்குப் பதிலாக மிதக்கும்.
பிறகு பக்கத்து வீட்டுப் பூனை உணவாக ஆகிவிடும்.
இதே போல் வாள மீன் விலாங்கு மீன் த்ிர மத்த மீன் வகையறாக்கள் வருவதும்
பெல்லி அப் செய்வதும்
நாங்கள் வருத்தப் படுவதும் நடந்து வந்தது.
அக்கம்பக்கம் பசங்க எல்லாம் "யேய் மீன் வரப்போரது " 'என்று வந்து பார்ப்பதும், அச்சச்சோ இதுவும் போயிடுத்தா
எண்று உச்சுக் கொட்டுவதும் வ்க்கமாகி விட்ட வேளையிலே.... எங்க வீட்டு எஜமானருடைய(நிஜமாகவே அவர்தான் எஜமானர்) உடற்பயிற்சியாளர் இந்த அரோவானா மீனை வளர்ப்பது பற்றீ ரொம்ப சிறப்பாக எடுத்து சொன்னார்.
அடக் கடவுளே இன்னோரு ஜீவனா என்று முதலில் தோன்றினாலும் அவர் சொன்ன அடுத்த நாளெ,
இந்த ஆசாமி (நம்ம மீன்டசி)ஒரு பாலிதீன் பையில் துள்ளிக்கொண்டு வந்து விட்டார்.

என்னுடைய மீன் (வேறு மாதிரிப் பார்த்த )கண்களுக்கு(ஜாண்டிஸ் eyes... சொல்லக் கூடாது) அது பரிதவிப்பதாகத் தோன்றியது.
இந்த மீனோடு வந்த உதவியாளர், அதற்கு உணவும் கொடுத்து விட்டுப் பொவார் என்ற நினைப்பில் நாங்கள் பரமரிப்பு பற்ரிய விவரங்களைக் கேட்கும் போது தான், தெரியும், வந்திருப்பவர் (arovaana)


லைவ் fish சாப்பிடுகிறவர் என்று.
சகலசைவப் பழக்கங்களையும் பின்பற்றும் வீட்டில்
உயிரொடு வாங்கித் தொட்டியில் போட்டு அது சாப்பிடுவதை வேறு பார்க்கணுமா. ,,சரிப்படாதே என்று நான் வாயைத் திறப்பதற்குள், எ-ர் சரிப்பா நான் பாத்துக்கிறேன் என்று சொல்லி வழிஅனுப்பி வைத்தார்.
அப்போது ஆரம்பித்தது மத்ஸ்யாவதாரப் பெருமை.
உண்மையாகவே இந்த வகை மீன் டிஸ்கவரி சானலில் வந்ததாம்.
அதன் விஸ்வரூபம் 6 அடியாம்.
வளர வளரத் தொட்டி பெரிசாக வேணுமாம்.
நான் நம்பவில்லை.
எல்லாம் ஹம்பக். சும்மா மார்க்கெடிங் பேச்சு என்ற யோசனையில், முதலில் 50 பைசா மீன் இரையாகப் போடலாம்னு நினைத்து இன்னொரு மீன்கள் விற்கும் கடைக்கு( அதாவது மீன் சாப்பிடற மீன் விற்கும் கடை. நீங்கள் வேறு ஏதாவது கற்பனை செய்ய வேண்டாம்)
போனோம்.
அவனுக்கு ஒரே குஷி.
என்ன சார் அரோனாவா. ??வீட்டுக்கு வாஸ்துப்படி நல்லது சார். !
இப்படியே தினம் 10 பொடுங்க. அப்பறம் வளந்தப்புறம்
பெரிசு போடலாம் என்று ஒரு 20 கறுப்பு கலர் மோல்லி எனும் மகிழ்ச்சியாகத் தங்களுக்கு நேரப்போவதைத் தெரியாத ஆடிக் கொண்டிருந்த ஒரு இன்ச் மீன்களைக் கொண்டுவந்தோம்.
வழி முழுவதும் இதென்னடா காலம். ஒரு வேளை இந்த அரோனா போன ஜன்மத்தில் நமக்கு விருந்தாளியோ,மாமியார்,மாமனாரோ இல்லாட்ட ஹாஸ்டலில் விடப்பட்டு சாப்பாட்டுக்கு நாம ஏங்க வைத்த பிள்ளையோ என்றெல்லாம் நாடி ஜோஸ்ய ரேஞ்சில் மனசு ஓடுகிறது.
இரண்டு வாரம் முன்னால் எங்கள் வீட்டுக்கு வந்த(பொழுது போகாமல் எல்லாருடைய சர்வ நாடியையும் ஆருடம் பார்த்து ஒரு வழி பண்ணுகிறவர்) so called சினேஹிதர்
என் கையைப் பார்த்து உங்களுக்கு 4 குழந்தைகள் பிறந்து இருக்கணுமே என்று கேட்டிருந்தார்.
சும்மா கேள்வி கேட்டாலே முழிக்கும் வகை நான்.
இந்த மாதிரி வாழ்க்கையே கேள்விக்குறி மாதிரி ஒரு குண்டு போட்டார்னால்// வெலவெலத்து விட்டது.
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே.
எங்களூக்கு இந்த 3 குழந்தைகள் தான்.
வேற ஒண்ணூம் தெரியாதே என்று நான் அவஸ்தைப்பட
இவர் உள்ளுக்குள் சிரிப்பு வெளில சீரியஸாக வைத்துக் கொண்டு(ஜாதக ஜோசியமெல்லாம் நான் தான்) கவனிக்கிறார்.
என்னவெல்லாமொ நினைப்பு வருகிறது. ஒரு வேளை ' பழைய சினிமாக்கள் மாதிரி ஏடாகூடமாக ஏதாவது நடந்து
இருக்குமோ? இல்லையே, ஒவ்வொரு தடவையும் எல்லோரும் வரப் போகத்தானே இருந்தார்கள். இப்படி நான்
மாயமோஹினி trailer மாதிரி ரீவைண்ட் பண்ண, அவர் என் கையை இப்படித் திருப்பிப் பார்த்து ஆமாம்மா உங்களுக்கு மூன்று தான் என்று அசடு வழிந்தது,
இப்போது நினைவுக்கு வருகிரது. அதாவது feed fish வாங்கி வரும்போது.
எப்படியோ மீனும் வளர்ந்து மீனாக்ஷி என்று நாமமும் சூட்டி
நாளிரு மேனி பொழுதிரு வண்ணம் வளர்ந்து இப்போது 3 அடி நீளத்தில இருக்காங்க.
விட்டா வளருவாங்க.
எங்கே போறது அவ்வள்வு பெரிய தொட்டிக்கு.?
அப்புறம் நாங்கள் இடம் மாற வேண்டியதுதான்.
அதாவது சுவரோரம் உட்கார வேண்டி வரும்.
அவருக்கு தனி வாட்டர் purifier, air cleaner ,லைட் தனி.
அவரு தொட்டிக்கு உள்ள இருந்தே நம்மளை சர்வே பண்ணுவாரு.
வர சைவ ஆளுங்களுக்கு எல்லாம், சுத்தி வரும் குட்டி மீன்களை பெரிசோட கூட விளையாடும் என்று சொல்லுவோம company.
இப்போது எல்லோருக்கும் தெரியும். big eats small,
என்ன செய்வது!
பக்கத்தில போனா அம்மா என்கிறது.
என்னது மீனாவது குரல் கொடுப்பதாவதுனு ஒரு மாதிரி என்னைப் பார்க்க வேண்டாம்.
மீனாட்சிக்கு வேற யாரையும் தெரியாதே.
அதனாலே தன் மொழியில் என்னைக் கூப்பிடுகிறது.
அவ்வாளவுதான்.

4 comments:

பொன்ஸ்~~Poorna said...

மீனாக்ஷிக்கு இன்னும் கொஞ்சம் பெரிய படமா போட்டிருக்கலாம்ல? :)

வல்லிசிம்ஹன் said...

மீனாட்சி !!! யாரு வந்துஇருக்காங்க பாரு.!!பொன்ஸ்!வாங்கப்பா.மினாட்சியோட புதுப் படங்கள் பசங்களோட செல் போனில் இருக்கின்றன. அடுத்த போஸ்டில் போடறேன்.நல்லா இருக்கிங்களா? காபி சரியாப் போட்டு ரசிக்க முடிகிறதா?இப்போது இந்த வெறும் மீனாக்ஷியா,,இல்லை மீனாட்சிசுந்தரமா தெரியலை.

துளசி கோபால் said...

மூணடி நீளமா? என்னப்பா முத்துமுத்தா மக்காச்சோளம் மாதிரி இருக்கான்?

அவனுக்குத் துணை வேணாமாமா?

ஒண்டியா போரடிக்காதா?

வல்லிசிம்ஹன் said...

வேணூம்ப்பா. இப்போ வாங்கிப் போட்டா சண்டை வருமாம்.
ஏன்னா இது சைசுக்கு அது இருந்தால் இரண்டுமே சண்டைக்கோழியாகுமாம்.
அநேகமா அடுத்த பிறவிக்கு இப்பவே அடி போட்டுவிட்டேன்னு நினைக்கிறேன்.
அப்பவும் இதே மாதிரி 2 வந்து நிக்கப் போறது.:-)))

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...