முதுமை எப்போதுமெ இனிமை.
குழந்தைகளுக்கு , சீக்கிரமே வயசானால் படிக்க வெண்டாமே என்று தோன்றும்.வேலைப் பளு தாங்க முடியாமல்பொருமும் 40 வயது அம்மாக்களும்,அலுவலகத்து அடிமைத்தனத்தின் எல்லையில்நின்று வி.ஆர்.எஸ் வாங்க நினைக்கும்இன்னும் பிற சிலருக்கும்முதுமை ஒரு வரம்.தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும்தங்கள் அம்மா அப்பாஎத்தனை வயது வரை வாழ்ந்தார்கள் என்ற நினைவு ஓடும்அந்தக் காலத்தில் தங்கள் மாமியார் மாமனார் தங்களை நடத்திய விதம்(நல்லதும், கெட்டதும்) ஞாபகம் வருதெ ரேஞ்சில் ஓடும்.மனைவிகள் சிந்தனை,மணநாட்கள், தங்கள் தந்தையர் அனுபவித்த பொருளாதாரத் தொந்தரவு,தாயார்கள் சொன்ன வார்த்தைகள் ,மாமியார் வீட்டில் முதல் நாள்,முதல் சாப்பாடு(?)நம்மைக் கண்டுகொண்டவர்கள்,தோழமை பேசினவர்கள்,சரியான மொஃபஸ்ஸ்ல் என்று வர்ணித்தவர்கள்இந்த மாதிரி நல்லதும் பொல்லாததும் ஓடும்.கணவர்களோ மாமனாரிடம் உரிமை கொண்டாடிய விதம், மச்சினர்கள் அருமை, இல்லையானால் கடி,அறுவை , புது மனைவியை நெருங்க விடாமல் கொட்டம் அடித்த வானரங்கள்,மனைவியின் மற்ற சொந்தங்கள் தன்னை மிருகக்காட்சியில் புதிதாக வந்த பணம் பறிக்கும் ஜந்து போல பார்த்தது. அலட்டிக் கொண்டது, இவைகள் ஞாபகம் வரும்குழந்தைகள்,படிப்பு,வேலை,இன்ஷுரன்சு,கார் வாங்கிய,கடன் வாங்கிய, இத்தியாதி இத்தியாதி நினைவுகள் வரும் என்று நினைக்கிறேன். இது :-))
நமக்குத் தெரியாத டாபிக்.இவை ஓயும் நேரம் முதுமை நம்மை நெருங்கி விட்டதாஎன்று யாரும் யோசிப்பதில்லை.பெண்ணூக்குப் பையன் தேடும் போதும்,பையனுக்குப் பெண் தேடும் படலம் ஆரம்பிக்கும்பொதும் ஒரு நூதனமான சங்கடம் வரும்.என்ன தெரியுமா?நம்ம இத்தனை நாள் வரை இருந்த சோ அண்ட் சோநிலைமை மாறி,பொண்ணோட அம்மா, அப்பா ஆகும்போதும்,இல்லை பையனோட அம்மா, அப்பவாகத் தெரியும்போதும்,"அதோ வராளே "ஆறு கஜப் பச்சை புடவை அவதான் நம்ம ஜில்லுக்கு மாமியாராம்."வரச்சேயே வாசனை பார்த்தியா. எல்லாம் ஃபாரீன்.ந்ம்மாத்து மாப்பிள்ளை சம்பாத்தியம் இப்ப்டித்தான் போரது போல" என்ற பேச்சைக் கேட்க நேரிடும்.இல்லாவிட்டால் பெண் போட்டோ,ஜாதகம் இவற்றோடு வரப்போகும் (வருவது வராதது அப்புறம் தான் தெரியும்)சம்பந்தி வீட்டுக்கு ஒரு தளர்ந்த, எதிலேயுமெ fஃஒகஸ்பண்ணாத பார்வையோடு அங்கே இருக்கும் எல்லோருக்கும் (ஸப்ஜாடா) வணக்கம் சொல்லி,
பழங்கள்,பூக்கள் எல்லாவற்றையும் வைத்து விட்டு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, நிமிரும்போது ஒரு கேள்வி பாயும்.'நீங்கள் எல்லாம் ரொம்ப மாடர்ன் போலத் தெரியறதே.'யேன்னால் எங்க பக்கம் 9 கஜம் புடவை தான் எல்லோரும்.சுத்தி முத்திப் பார்த்தால் சில 6கஜம், சல்வார் காட்சிக்கு வந்து போகும். கேள்விகேட்டவர் யோசிப்பது என்ன என்று அர்த்தம் புரியாது, அப்போது புரியும்ஒன்று,நாம் ஏற்கனவெ செகண்டரி சிடிசன் ஆயாச்சுனு....அவர்களுக்கு நம் பையன் தான் முக்கியம்.கல்யாணம் வரை கொஞசம் வால்(இருந்தால்) அசைத்துப் பார்க்கலாம்.. பெண் வீட்டு மனிதர்களுக்குநாம் மனித வேடம் போட்ட பூதம்.'ஐய்யோ பையனோட அப்பா எவ்வளவோ தேவலை.'இது இருக்கு பாரு, (என்னோட திசையில் எல்லோரும் பார்த்த வண்ணம் இருப்பார்கள்")நாம் அப்போது அப்ப்ரூவல் வாங்கக் காத்திருக்கும்அதான் எத்தனையோ இடங்களில் காத்து இருக்கோமெ, காலேஜ் வாசல், ஸ்கூல் வாசல் இத்தியாதிஅதுபோல் உலகத்தில இருக்கிற ந்அல்ல்தையெல்லாம் முகத்தில் சேர்த்துக் கருணைக் காமாட்சியாகக்காட்சி கொடுத்தாலும் ம்ம்ம்ஹூம், ஒண்ணும் தேறாது.பிராண்டட். மாமியார். அதனால் இவள் இப்படித்தான். லேபல் ஒட்டாத குறை. சரி இப்போ பழைய கேஏள்விக்குப் போவோம். ந்ஈங்கள் ெல்லாம் மாடர்னா?
என்று கேட்ட அம்மாவின் தொனி
எனக்குப் புரியவில்லை.
குறைந்த வெட்டுண்ட தலைமுடி தான் கவனத்தை இழுத்து அந்த மாதிரி பேச வைத்தது என்று. பிறகுதான் தெரிய வந்தது.அதற்காக நான் சவுரியோ, நீண்ட கூந்தல் தைலமோ பாவிப்பதாக இல்லை. இந்த மாதிரி என் கணவருக்கும் சில பல கேள்விக்கணைகள் , வயதானவராகத் தோற்றம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினாலும்,எப்படியோ தப்பி இப்போது நிஜமாகவே வயதான (கொஞ்சமே கொஞ்சம் ஒரு 10%)அப்பியரன்ஸ் கொடுக்கிறோம்.ஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் (ப்லாக் சின்னப் பசங்களை சொல்ல வில்லை,)55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான்கூடு மான மட்டும் சீக்கிரமேஆன்மீகப் பாதையில் செலுத்தி,ஹிண்டு க்ராஸ்வேர்ட் போட்டு, சபாவில் மெம்பராகித், தவராமல் டை (தலை) போட்டுக் கொண்டுசிகாகோ,எல்.ஏ, இல்லினாய், ஓஹையோ,கிலீவ்லாண்ட் சாஃfட்வேர், விசா பிரச்சினை,அரோரா கோவில்,மாப்பிள்ளை இல்லாட்ட பையன் இரண்டு கார் வைத்து இருப்பது, பெரிய வீடு வாங்கி கிரிஹபிரவேசம் செய்தது, என்று பேச ஆரம்பித்தால் முதுமை பக்கத்தில் கோலாகலமாக வருகிறது என்று பொருள்.வரணும்.
இல்லாவிட்டால் யார் விட்டார்கள்/
'அய்யோ பாவம் ந்மம ஜில்லு மாமியார் கொஞ்சம் பாரியா இருக்கார் இல்லியா,அதனாலே அடிக்கடி தொப் தொப் (நான் விழும்போது சத்தம் கேட்ட நினைவில்லை) எ ந்று விழுந்து விடுகிறாராம்.ம்ம் இந்தப் பொன்னு தான் ெல்லாம் கவனிச்சுக்கிறதுனு சொல்லும்போதுஎனக்கு சீக்கிரமே வயசாகிவிடும் என்றுதான் தோன்றுகிரது.'இது சொந்தக் கதை இல்லை.'இப்படி சொன்னால் டிஸ்கி என்று அர்த்தமா?அப்படி இப்படி போயி,,
எப்படி? ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டேனா?