Friday, July 28, 2006

சேது,பாம்பன்,தனுஷ்கோடி -2






ராமேச்வரம் எக்ஸ்ப்ரஸ் ராமனாதபுரத்தை விட்டுக் கிளம்பியதுமே
ரயில் பாதையை மணலும் புதர் மற்றும் முட்கள் சூழ்ந்த பரப்பு கண்ணில்பட ஆரமபித்தது.
முற்றும் புதிதான பயணம்.
உச்சிப்புளி என்று ஒரு ஸ்டேஷன்.
பின் தங்கச்சி மடம்
அதன் பின் பாம்பன்.
என் அப்பா முதலிலேயே சொல்லி வைத்து இருந்த்தால் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கடலும் பாலமும் வந்துவிட்டன.
காற்றோ ஆக்ரோஷமாக வீசுகிறது.
ரயிலுக்கு இரண்டுபக்கமும் கடல். அடியெ பாலத்தின் தூண்களில் மோதும் அலைகள்.
மெதுவாகப் போன ரயில் நின்றது அப்போதுதான் cantilever bridge என்று சொல்லப்படும் அந்த பாலத்தின் நடுவே இருந்த தண்டவாளங்கள் உயர்ந்து ஒரு வியாபாரக்கப்பல் சென்றது.
மூச்சு விடக்கூடத்தோன்றாமல் பார்த்தொம்.
பின்னாட்களில் வேறு எத்தனையோ அன்னிய நாடுகளில்
வித விதமான அதிசயங்களைப் பார்த்தாலும்,
அப்போது பார்த்த அந்தக் கடலும்,ரயிலும்,கப்பலும் இன்னும் எனக்கு ஆனந்தத்தைத் தருகின்றன.
ராமேச்வரமும் வந்தது. குதிரை வண்டியில் ஏறி,
போஸ்ட்மாஸ்டர்(எங்கள் அப்பா) வீட்டுக்கு வந்தொம்.
ராமெச்வரம் வீடுகள் வீதியில் ஆரம்பித்து அடுத்த வீதியில்
முடிந்தன.வீட்டிற்குள் நுழைய 7,8 படிகள் ஏறி உள்ளே போனொம்.
மஹா பழைய வீடு. இருட்டு,கொஞ்சம் வெளிச்சம் வந்தது மேலே இருக்கும் ஜன்னல்கள் வழியாகத்தான்.
அம்மாவின் சமையலறை விறகு அடுப்பு ,கரி அடுப்பு எல்லாம் சுத்தமாக இயங்கிக் கொண்டு இருந்தன.
காஸ் வராத நாள்.
கெரசினும் ரயிலில் வந்தால் உண்டு. முக்கால்வாசி வராது.
புதுவிதமான குடித்தனம் செய்து கொண்டிருந்தார் எங்காள் அம்மா.
புதிதாக வரும் காய்கறிகள் பற்றியும், வாசலில் உட்கார்ந்தால் வித விதமான மனிதர்களின் போக்குவரத்து தன்னை எப்போதும் , ஒருபுதிய உலகக்
கற்பனையைத் தூண்டும்படி இருப்பதாகவும் சொன்னார்..எல்லாவற்றையும் பாசிடிவாகப் பார்க்கும் உயர் மனம் அவளுடையது
சின்ன தம்பி அப்போது பள்ளி இறுதி வகுப்பில் இருந்தான்.
அவ்னுக்கும் ஓயாதவேலை. சந்தோஷமாக இருந்தான். வரும் வீ.ஐ.பி நபர்களை ராமெஸ்வரத்தை சுற்றிக் கான்பிப்பான்.
எத்தனை தீர்த்தங்கள் உண்டோ அத்தனை இடங்களுக்கும் அழைத்துப் போவான்.
சங்கு, சோழி, பவளப்பாறை, கோரலால் ஆன கைப்பொருட்கள்.
எல்லாம் எங்கே குறைந்த விலையில் வாங்கலாம் என்று தெரியும் அவனுக்கு.
அவனுடன் தனுஷ்கோடி வரை போய் வந்தோம்.
1967இல் இப்போது போல் அவ்வளவு வசதி கிடையாது. நடந்துதான் போனோம்.
ராமர் கோவில் குருக்கள் மட்டுமே போய் வரும் நாட்கள்
அவை.
நாங்கள் மீண்டும் 2003 இல் மதுரையிலிருந்து காரில் பயணம் செய்தோம்.
தேவிப்பட்டினம், சேது ஸ்னானம், முடித்து அதே பாலம் வழியாக ஆனால் தரை மார்க்கமாக அந்தப் பாலத்தை வேறு கோணத்தில் பார்த்தபடி.
பழய நினைவுகளை அசை போட்டபடி....
இப்போது அதே தம்பி பெரிய வேலைக்கு வந்து விட்டதால் . தனி காட்டெஜ், கொடுக்கப் பட்டது
அதெ போல் கடைகளில்
தெரிந்த மனிதர்கள்.எலோருக்கும் வயதாகி விட்டது.
கந்தமாதனபர்வத்தில் இருக்கும் அர்ச்சகரிடம் இவன் கேட்கிறான்"சாருக்கு என்னைத் தெரிகிறதா?' என்று. அவரும் அட போஸ்ட்மாஸ்டர் வீட்டுப் பையனில்லை!!! என்ரு ஆச்சரியப் படுகிறார்.
தன் மகனும் என் தம்பியும் புயல் வந்த போது செய்த சமூக
சேவையை சொல்கிறார். இன்னும் சில நண்பர்களைப் பார்க்க முயற்சி செய்து விட்டு சிலரைப் பார்த்து முப்பத்து நான்கு வருடக் கதைகளைப் பேசிக் கோவிலுக்கும் வருகிறொம்.
ராமேஸ்வரம் மாறியது தெரிகிறது.
புது விதமான நடை உடை பாவனைகளொடு இருக்கும் அண்டை நாட்டுத் தமிழர்களின் நட்பைப் பார்க்க முடிந்தது.
அழகான குடிசைகள், அதன் வாசல்களில் கோலங்கள்
சுத்தமான சூழ்னிலையை விரும்பும் அவர்களது பான்மை
கண்கூடாகத் தெரிகிறது.
நேபாலோ, சிக்கிமோ ஏதோ ஒரு நாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் ராமேஸ்வரம் அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.
கேரளா சர்க்கஸ் ஒன்று கூடாரம் அடித்துக் கொண்டு இருந்தது.
அங்கே ஒரு திடலில் சிவாஜியின் கௌவுரவம் படம் கூட ஓடிக் கோண்டு இருந்தது.
புயலின் சாயல் அழியாமல் தங்கி விட்ட பூமியாகத் தனுஷ்கோடி.
மறைந்து மறைந்து ஓடி வரும் சிறிய தண்டவாளங்கள்.
பச்சை மரகதமாக ஒரு கடல்.
பழுப்பு நிறமாக இன்னோரு கடல்.
காலம் மாற்றாத வெண்மணல்.,, சிப்பிகள் ஆயிரக்கணக்கில்.
நமது ஜனாதிபதியின் எளிய வீடு., சேது பாலத்தைக் காண்பிப்பதாகக் கூவும் படகுக்காரர்கள்.
எல்லாமே இருக்கின்றன . கூடவே சமய சொற்பொழிவுகளும் அறைகூவி அழைத்தவண்ணம் இருந்தன.
நம் இந்தியா இங்கே இருக்கிறது என்ற நினைப்புடன் திரும்பினோம்.



Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...