Saturday, October 04, 2014

வழி,தங்குமிடம் ராமேஸ்வரம்


எல்லொருக்கும் இராமேஸ்வரம் என்பது ஒரு புண்ணிய யாத்திரை தலமாகத் தான் தெரியும். எனக்கு அப்படித்தான்.
இந்தப் பதிவு ஒரு பின்குறிப்பாக எழுதுகிறேன்.
ஒரு நாள் பயணமாகவே போய் விட்டு வரக்கூடிய இடம் தான். ஆனால் அங்கே தங்கி வந்தால் இன்னும் நிறைய இடங்களைப் பார்க்கலாம்.
மதுரையில் இருந்து நான்கு மணிநேரப் பயணம்.
ராமனாதபுரத்தில் நல்ல வசதியுடன் விடுதிகள் இருக்கின்றன.
அங்கே இறங்கி சேது விலிருந்து பயணத்தை ஆரம்பிக்கலாம்.
வைணவர்கள் சேது தீர்த்தத்தில் குளித்துவிட்டு அடுத்த நாள் ராமேச்வரம் அக்கினி தீர்த்ததில் குளிப்பார்கள்.
சேதுவில் சங்கல்பம் செய்து முன்னோர்களுக்கு நினைவாக கட்லில் குளித்து அங்கே வாழும் வசதி குறைந்தவர்களுக்கு நாம் அணிந்த் உடையோ ,அன்னதானமோ செய்யலாம்.
அங்கிருப்பவர்களே நமக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.

அங்கெ பக்கத்திலேயே ராமன் தபம் செய்த திருப்புல்லணை ஆதி ஜகன்னாதன் கொவிலுக்குப் போனால் மதிய சாப்பாடு உறுதி.
கடலுக்குக் குளிக்கப் போவதற்கு முன்னால் சொல்லிவிட்டால் போதும். சமைத்து வைத்துக் கொடுப்பார்கள். ஆஹா அந்தப் பசிக்கு அந்தப் பொங்கல் அமிர்தம் தான்.
இங்கு இராமபிரானுக்கு கடலரசன் சேதுப் பாலம் கட்ட வழி சொல்லிக் கொடுத்தானாம்.
கடலைப் பிளந்து இலங்கைக்குப் பாலம் அமைத்தால் கடலில் உள்ள உயிர்கள் அழியும், அதனால் மிதக்கும் பாலம் ஒன்றை நளன் என்னும் தேவ சிற்பியை வைத்துக் கட்டலாம், என்று யோசனை சொல்ல, இராமனும் நளனை
வேண்ட வானரங்கள் உதவியுடன் அதிகக் கனமில்லாத கற்களால் சேதுப்பாலம் அமைந்ததாம்.
அதனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அப்போது இன்னும் சிறப்பாக இயங்கி இருக்கிறது என்று எனக்குத் தெளிவாகியது.
பக்கத்தில் தேவிபட்டினம் என்னும் கடலோர கிராமத்தில் நவபாஷணம் என்னும் நவக்கிரக பரிகார தலம் இருக்கிறது.
கடலுக்குள் போய் ராமபிரான் ஸ்தாபித்ததாகச் சொல்லப்படும் கிரஹங்களைச் சுற்றி வந்து அர்ச்சனை செய்யலாம்.
அங்கேயும் தானம் செய்யும் வழக்கம் உள்ளது. நம் பின்னாலேயெ அவர்கள் குறி வைத்து வருவதைப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்

அங்கிருந்து நேரே ராமேஸ்வரம் தான். அங்கநிறைய தங்கும் விடுதிகள் வந்து விட்டன.
நாற்பது வருடங்கள் முன்னால்
நமக்கு பரிகாரம் செய்ய உதவியாக இருக்கும் சாஸ்திரிகள் வீட்டிலேயே தங்கவும், சாப்பிடவும் வசதி செய்வார்கள்.
இப்போது நமக்குத்தான் அந்த வசதி எல்லாம் போதாதே..
அதனால் (பண) வசதிக்கு ஏற்ப விடுதிகள் கிடைக்கின்றன.                                                                                                        
ஸ்ரீ ராமனாத ஸ்வாமி ஆலயத்துக்குள் 22 தீர்த்தங்கள் இருக்கின்றன.
எல்லாம் நாம் செய்த , செய்யப் போகும் பாப விமோசனம்,,(நிவர்த்தி) செய்யக் காத்துக் கொண்டு ,அந்தக் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுப்பதையே சேவையாகச் செய்யும் நண்பர்களோடு
தயார் நிலையில் உள்ளன.
எத்தனை உயர்ந்த சேவை.!!
பர்வதவர்த்தினி அம்மனும், இராமலிங்கமும் ஜோதியாகத் அவ்வளவு ஓளியோடு காட்சி தருகிறார்கள்,
அங்கெ இன்னும் கை நீட்டும்
காட்சி வரவில்லை.
பக்தியும் சுத்தமும் ஆன்மீகமும் இருந்தன.
ஏழ்மையும் இருந்தது.

இன்னோரு தடவை என்னை இராமேஸ்வரம் போக வைத்த தமிழ் மணத்துக்கு நன்றி..

Wednesday, October 01, 2014

1970 லிருந்து 83 வரை 6-27-2006







காப்டன் ஹாடாக்,டின் டின், ஸ்னொயீ ,கால்குலஸ் எல்லொரும் மகிழ்விக்க வந்தது ஆஸ்டரிக்ஸ் காலத்தில் தான். நான் இவர்களை நினைவு படுத்திக்கொள்வது ஒரே ஒரு காரணத்துக்காகத்தான்.
நன்றி மறக்கக் கூடாது.
1977,78 காலங்களில் மழைக்காலம் என்றால் மழை பெய்யும்!!!!1
அப்பொது செப்டம்பர் விடுமுறையும் சேர்ந்து கொள்ளும்.
பசங்க விளையாட வெளியே போக முடியாது. அது போல் ஒரு நச நசா மழை. எத்தனை நேரம் காரம்பொர்ட் விளையாட? எத்தனை நேரம் வேகவச்ச கடலையைக் கொறிக்க.?

சக்தியை செலவழிக்க ஒரு வழி வேணுமே.
அப்போது மவுண்ட் ரோடு தான் அடைக்கலம்.
கொஞ்ச நேரம் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யுட்.
மூன்று மாடிகளும் பார்த்து, ஒரு கூடை, ஒரு பிள்ளயார், ஒரு சிப்பி(எல்லாம் சேர்ந்து 30ரூபாயில் அடங்கி விடும்.)
அடுத்த படையெடுப்பு ஸ்பென்சர் கட்டிடம். அங்கே போய் இருக்கும் கடைகளைப்
பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல்---எல்லாம் பட்ஜெடுக்கு மேல் இருக்கும்.
அடுத்து நடந்து ஹிக்கின்பாதம்ஸ் வருவோம்.
நடுவில் கொறிக்க ஏதாவது உண்டு.
ஹிக்கின்ஸில் குழந்தைகள் பக்கம் இப்போது போலவே நல்ல புத்தகங்கள் இருக்கும்.
ஒன்றொன்றாகப் படித்து விட்டு கடைசியில் ஒரு மனதாக
லேடிபேர்ட் புஸ்தகம் ஓன்றும் (5ரூ) டின் டின் புஸ்தகம்(18ரூ) ஒன்றும் வாங்கி வருவோம்.
ஸ்பெசல் டிரீட் ஆட்டொவில் வீடு வருவதுதான்.
பிறகு வீடே கலகலப்பாகி விடும். முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.
பிறகு  ஆங்கிலம்  கற்றுத் தேர்ந்த சின்னப் பாட்டியிடம் சொல்ல வேண்டும்.
இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.
இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.
இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள் மிஸ்டீரியசாகக் காணமல் போகும்.
டுயூ டேட் முடிந்து பள்ளிக்கூடம் திறந்த பிறகு, நான்  தானெ
இருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!

எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நாந்தான் லைபிரரி உமன். பெரிய பாட்டியோட வடுவூர் துரைசாமி,
மாமியாருடைய லக்ஷ்மி,தேவன், கல்கி புத்தகங்கள்,
என்னுடைய சிவசங்கரி,சுஜாதா, பி வி ஆர், சாவி
இதற்குப்பிறகு பசங்களோட புக்ஸ்.
இப்பவும் சொல்லுவார் அந்த லைபிரரி ஓனர்.
105 ருபா புஸ்தகம் வரவே இல்லைம்மா என்று.
நான் என்ன சொல்லுவேன்? புத்தகங்கள் பைண்டு செய்து ஸமத்தாக அலமாரியில் இருக்கிறது என்றா?
அதற்குப் பிறகு அவர் கடைக்கே நிறைய புத்தகங்களை
சும்மாவாகவே கொடுத்து சரி பண்ணி விட்டது.
அதுவும் இந்த மாதிரி புத்தகங்கள்,
லியான் யுரிஸ்,
ஹரால்ட்ராபின்ஸ்,
மரியோ பூசோ,
இர்விங் வாலஸ்,
ஆர்தர் ஹைலி,
இயன் fஃலெமிங்,
மேலும் சிலருடைய புத்தகங்களை கிலொ கண்க்ில் கொடுக்க வேண்டி வந்தது. அறிவு தானம் நல்லதுதானே1
அதனாலே பரவாயில்லை என்று நாங்களே சமாதனப்படுத்திக் கொண்டோம்.

வலையில் பதிவு மதுமிதா ஆராய்ச்சிக்காக

பெயர்----ஏழிசை நரஹரி*  (அச்சோ பாவம்)  5/24/2006
பதிவின் பெயர்----பொருனைக்கரையிலெ
பதிவு யுஆர்எல்--www.porunaikaraiyile.blogspot.com
மற்ற பதிவுகள்---www.naachiyaar.blogspot.com
---------------------------www.kurungudi-valli.blogspot.com(english)
பதிவு ஆரம்பித்த நாள்-----ஜனவரி 2006

பதிவு ஆரம்பிக்க உதவி------மற்ற பதிவுகளைப் படித்ததால்
தோன்றிய என்னுடைய எண்ணம், மற்றும் எழுத வேண்டும் என்ற ஆர்வம்.
இருக்கும் இடம்----------சென்னை, இந்தியா.
புனை பெயர்கள்-----------மனு,வல்லி.
எழுதும்போது கிடைத்தது---நல்ல நண்பர்கள்
மேலும் எதிர்பார்ப்பது.........நல்ல நட்பு வட்டம்
சாதிக்க நினைப்பது நிறைய பொருள் பொருந்திய எழுததுக்கள்
http://www.blogger.com/post-edit.g?blogID=21983712&postID=114846876869130724

Tuesday, September 30, 2014

கனவுத்தொழிற்சாலை மந்திரவாதிகள் 15/6/2006

இப்பொழுது என்னை விட்டுப் போகாதே பாடல் தேவ் ஆனந்த்
அன்னை என்பவள்   நீதானா  பானுமதி.
போகும் முன் உன்னை உற்று உற்றுப் பார்க்கிறேன் ஏனென்றே தெரியவில்லை ஜக்கம்மா.
சிங்கம் 13 தடவை பார்த்த படம்.
என்னுடைய     ரோல் மாடல் எல்லாவிதத்திலும்.
இந்த ஒருநாளை நானும் நீயும் ஒரு ஹாலிடேயாகக் கொண்டாடலாமே
நீங்க திரும்பி வந்தாச்சா மிஸ்.
அனைவரையும் பாடவைத்த  சௌண்ட் ஆஃப்  மியூசிக்
ஃப்ரொஃபெஸ்ஸர் ஹிக்கின்ஸுக்கு சவால் விடுத்து  கடைசியில் இருவரும் இணைந்த கதை.
ஆடிரி ஹெப்பர்ன்,கிரிகரி பெக்கின் 'ரோமன் ஹாலிடே' எத்தனையோ இதயங்களைத் தவிக்க வைத்தது.
இந்த மான் விழி சில சமயம் இவருக்கு பாம்பி என்ற மானை நினைவுக்குக் கொண்டு வருவதாகச் சொன்னவர்கள் ஏராளம்.இன்னும் இவர்களொடு ஏகப்பட்ட மந்திரவாதிகளால் கட்டுண்ட காலம்  நிறைய.   இப்பொழுது கொஞ்சம் அந்த உணர்ச்சிகளிலிருந்து விலகி வந்திருக்கிறேன்.  காலம் மாறிக், கனவுகள் மாறும்போது அவைகளில் நினைவுகளில் சேமிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.

Saturday, September 27, 2014

,முதுமை எப்போது ஆரம்பமா.ஆரம்பித்துவிட்டது.

முதுமை எப்போதுமெ இனிமை.  ஜூலை 29


குழந்தைகளுக்கு , சீக்கிரமே  பெரியவர்களாகிவிட்டால் படிக்க வேன்டாமே என்று தோன்றும்.

வேலைப் பளு தாங்க முடியாமல் பொருமும் 40 வயது அம்மாக்களும், அலுவலகத்து அடிமைத்தனத்தின் எல்லையில் நின்று வி.ஆர்.எஸ் வாங்க நினைக்கும் இன்னும் பிற சிலருக்கும் முதுமை ஒரு வரம்.

தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும் தங்கள் அம்மா அப்பா எத்தனை வயது வரை வாழ்ந்தார்கள் என்ற நினைவு ஓடும்.


அந்தக் காலத்தில் தங்கள் மாமியார் மாமனார் தங்களை நடத்திய விதம்(நல்லதும், கெட்டதும்) ஞாபகம் வருதெ ரேஞ்சில் ஓடும்

. மனைவிகள் சிந்தனை,
மணநாட்கள், தங்கள் தந்தையர் அனுபவித்த பொருளாதாரத் தொந்தரவு, தாயார்கள் சொன்ன வார்த்தைகள் , மாமியார் வீட்டில் முதல் நாள்,முதல் சாப்பாடு(?) நம்மைக் கண்டுகொண்டவர்கள், தோழமை பேசினவர்கள், சரியான மொஃபஸ்ஸ்ல் என்று வர்ணித்தவர்கள் இந்த மாதிரி நல்லதும் பொல்லாததும் நினைவுக்கு வரும்.


கணவர்களோ மாமனாரிடம் உரிமை கொண்டாடிய விதம்,
மச்சினர்கள் அருமை, இல்லையானால் கடி,அறுவை ,
புது மனைவியை நெருங்க விடாமல் கொட்டம் அடித்த வானரங்கள், மனைவியின் மற்ற சொந்தங்கள் தன்னை மிருகக்காட்சியில் புதிதாக வந்த பணம் பறிக்கும் ஜந்து போல பார்த்தது. அலட்டிக் கொண்டது, இவைகள் ஞாபகம் வரும்.


குழந்தைகள்,படிப்பு,வேலை,இன்ஷுரன்சு,கார் வாங்கிய,கடன் வாங்கிய, இத்தியாதி இத்தியாதி நினைவுகளும் வரும் என்று நினைக்கிறேன்.

இது :-)) நமக்குத் தெரியாத டாபிக்."-))

இவை ஓயும் நேரம் முதுமை நம்மை நெருங்கி விட்டதா என்று யாரும் யோசிப்பதில்லை.
பெண்ணுக்குப் பையன் தேடும் போதும், பையனுக்குப் பெண் தேடும் படலம் ஆரம்பிக்கும்பொதும் ஒரு நூதனமான சங்கடம் வரும். என்ன தெரியுமா?



நாம இத்தனை நாள் வரை இருந்த சோ அண்ட் சோ நிலைமை மாறி, பொண்ணோட அம்மா, அப்பா ஆகும்போதும், இல்லை பையனோட அம்மா, அப்பாவாகத் தெரியும்போதும், "அதோ வராளே "ஆறு கஜப் பச்சை புடவை அவதான் நம்ம ஜில்லுக்கு மாமியாராம்." வரச்சேயே வாசனை பார்த்தியா. எல்லாம் ஃபாரீன். நம்மாத்து மாப்பிள்ளை சம்பாத்தியம் இப்ப்டித்தான் போரது போல" என்ற பேச்சைக் கேட்க நேரிடும்.

இல்லாவிட்டால்(நம்) பெண் போட்டோ,ஜாதகம் இவற்றோடு வரப்போகும் (வருவது வராதது அப்புறம் தான் தெரியும்) சம்பந்தி வீட்டுக்கு ஒரு தளர்ந்த, எதிலேயுமெ ஃfஃஒகஸ் பண்ணாத பார்வையோடு அங்கே இருக்கும் எல்லோருக்கும் (ஸப்ஜாடா) வணக்கம் சொல்லி,

பழங்கள்,பூக்கள் எல்லாவற்றையும் வைத்து விட்டு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, நிமிரும்போது ஒரு கேள்வி பாயும். 'நீங்கள் எல்லாம் ரொம்ப மாடர்ன் போலத் தெரியறதே.'

"ஏன்னால் எங்க பக்கம் 9 கஜம் புடவை தான் ,எல்லோரும்". சுத்தி முத்திப் பார்த்தால் சில 6கஜம், சல்வார் காட்சிக்கு வந்து போகும். கேள்வி கேட்டவர் யோசிப்பது என்ன என்று அர்த்தம் புரியாது,
இது மட்டும் இல்லை
,
நம்ம பையனுக்காகப் (பெண் பார்க்கப்) போகும்போதும்,
நிறைய சோதனைகள் வரும்.

அப்போது புரியும் ஒன்று, நாம் ஏற்கனவெ செகண்டரி சிடிசன் ஆயாச்சுனு.... அவர்களுக்கு நம் பையன் தான் முக்கியம்.

கல்யாணம் வரை கொஞசம் வால்(இருந்தால்) அசைத்துப் பார்க்கலாம்.. பெண் வீட்டு மனிதர்களுக்கு நாம் மனித வேடம் போட்ட பூதம். 'ஐய்யோ பையனோட அப்பா எவ்வளவோ தேவலை.' இது இருக்கு பாரு, ....(என்னோட திசையில் எல்லோரும் பார்த்த வண்ணம் இருப்பார்கள்") .


நாம் அப்போது அப்ப்ரூவல் வாங்கக் காத்திருக்கும் ,அதான் எத்தனையோ இடங்களில் காத்து இருக்கோமெ, காலேஜ் வாசல், ஸ்கூல் வாசல் இத்தியாதி அதுபோல்,

உலகத்தில இருக்கிற நல்லதையெல்லாம் முகத்தில் சேர்த்துக் கருணைக் காமாட்சியாகக் காட்சி கொடுத்தாலும் ம்ம்ம்ஹூம், ஒண்ணும் தேறாது.
பிராண்டட்..!....------- மாமியார்.
அதனால் இவள் இப்படித்தான். லேபல் ஒட்டாத குறை.
சரி இப்போ பழைய கேள்விக்குப் போவோம். நீங்கள் எல்லாம் மாடர்னா? என்று கேட்ட அம்மாவின் தொனி எனக்குப் புரியவில்லை. என் குறைந்த வெட்டுண்ட தலைமுடி தான் கவனத்தை இழுத்து அந்த மாதிரி பேச வைத்தது என்று. பிறகுதான் தெரிய வந்தது. அதற்காக நான் சவுரியோ, நீண்ட கூந்தல் தைலமோ பாவிப்பதாக இல்லை. அது அந்த அம்மாவுக்குத் தெரியாதே.


இந்த மாதிரி என் கணவருக்கும் சில பல கேள்விக்கணைகள் ,
சார் எப்பவுமே பாண்ட் தானோ. என்னதான் இருந்தாளும் நம்ம வேஷடி அங்கவஸ்திரம் மாதிரி ஒரு டிக்னிடி இந்த மாடர்ன் டிரெஸ்ல வரலை சார்.
இந்த மாதிரிக்கேள்விகள் , வயதானவராகத் தோற்றம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினாலும், எப்படியோ தப்பி இப்போது நிஜமாகவே வயதான (கொஞ்சமே கொஞ்சம் ஒரு 10%) அப்பியரன்ஸ் கொடுக்கிறோம்.


ஆதலினால் நாமெல்லாம் செய்ய வேண்டியது என்ன வென்றால் (ப்ளாக் சின்னப் பசங்களை சொல்ல வில்லை,)


55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான்.
கூடு மான மட்டும் சீக்கிரமே ஆன்மீகப் பாதையில் செலுத்தி,ஹிண்டு க்ராஸ்வேர்ட் போட்டு,
சபாவில் மெம்பராகித்,


தவறாமல் டை (தலை) போட்டுக் கொண்டு ,
சிகாகோ,எல்.ஏ, இல்லினாய், ஓஹையோ,கிலீவ்லாண்ட் சாஃfட்வேர், விசா பிரச்சினை,அரோரா ,பிட்ஸ்பர்க்,கோவில்,மாப்பிள்ளை (இல்லாட்ட) பையன் இரண்டு கார் வைத்து இருப்பது, பெரிய வீடு வாங்கி கிரிஹப்பிரவேசம் செய்தது,
என்று பேச ஆரம்பித்தால் முதுமை பக்கத்தில் கோலாகலமாக வருகிறது என்று பொருள். வரணும். !!!!!!இல்லாவிட்டால் யார் விட்டார்கள்/

'அய்யோ பாவம் நமம ஜில்லு மாமியார் கொஞ்சம் பாரியா இருக்கார் இல்லியா, அதனாலே அடிக்கடி தொப் தொப் (நான் விழும்போது இந்தச்சத்தம் கேட்ட நினைவில்லை) என்று விழுந்து விடுகிறாராம். ம்ம் இந்தப் பொண்ணு தான் எல்லாம் கவனிச்சுக்கிறதுனு சொல்லும்போது எனக்கு சீக்கிரமே வயசாகிவிடும் என்றுதான் தோன்றுகிரது.

'இது சொந்தக் கதை இல்லை.'
இப்படி சொன்னால் டிஸ்கி என்று அர்த்தமா?
அப்படியே சொல்கிறேன். இது கற்பனை.
அப்படி இப்படி போயி,, எப்படி? ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டேனா?

Friday, September 26, 2014

எங்க வீட்டு லைப்ரரி

எங்க வீடும் புத்தகங்களும் பிரிக்க முடியாதவை.
அந்த விஷயத்தில் நாங்கள் ரொம்ப ஒற்றுமை.
எல்லோருடைய சுவைகள் வேறுபடும்.

ஆனால் புத்தகக் கடையில் நுழைந்தால்
அவரவருக்கு பிடித்த பகுதியில்,

நாங்கள் தொலைந்து போய், ஒன்று சேருவோம்.
இப்போது மகன்களும் மகளும் மணமுடித்து வேறு வேறு இடங்களில் இருக்கிறார்கள்.

ஆரம்பித்த பாடநிலைப் புத்தகங்களிருந்து,வயது வாரியாகப் புத்தகங்கள்.

என் இலாகா---, பக்தி,புராணம்,சமையல்,கலை,சினிமா
பிடித்த எழுத்தாளர்களுடைய நாவல்கள்.
முதலில் நம்ம லைபிரரி பார்க்கலாமா?

எழுத்தாளர்கள், புத்தகங்கள்.



கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின்
அமரதாரா,
அலை ஒசை
கல்கி களஞ்சியம்,
கல்கி எழுதிய கடிதங்கள்,
வீணை பவானி,
கள்வனின் காதலி,
இன்னும் பல.

தி.ஜானகிராமன் அவர்களின்,
மோகமுள்,
அம்மா வந்தாள்,
அமிர்தம்,
கொட்டுமேளம்,
உயிர்,
சிவப்பு ரிக்சா,
பிடி கருணை,
மரப்பசு, செம்பருத்தி, அன்பே ஆருயிரே
அடி ..... இன்னும் சில.
பிடித்த பக்கங்கள் பல.
அதில் சில வரிகள் 'அத்துவின் முடிவு ' என்னும் கதையில்...
file:////ஐயா என்று யாரவது வாசலில் கூப்பிட்டால், யார் என்று அவள் கேட்டுக்கொண்டு வரும்போது திகைத்துத்தான் போவார்கள்.
பளீர் என்ற சிகப்பு,
கருகரு என்ற சிற்றலையிட்ட கூந்தல்,
கறுப்புப் பட்டுப் புடவை,
மத்தாப்பூவாகப் பூரிக்கும் தோடு//
அப்பாடி !!அந்த அம்மாவே வர மாதிரி அவர் எழுத்தோவியம் காண்பிக்கும்.
பிறகு
கல்கி சார் கதைகள்,
அகிலன் அவர்கள் கதைகள்,
வேங்கையின் மைந்தன், வாழ்வு எங்கே/
கல்கி,கலைமகளில் வந்த தொடர்கள்,.

கயல்விழி,வானதி,பொன்னன்,பொன்னி
சிவகாமி, நரசிம்ம பல்லவன் இவர்களுக்காகத் தூங்காமல் யோசித்து இருந்த நாட்கள்.



சிவகாமிக்காக அழுத நாட்கள்.
டி.கே.சி அவர்கள்,ராஜாஜி ,கல்கி,சிறு பெண் ஆனந்தி பரிமாறிக்கொண்ட தகவல்கள்.
அலை ஓசை படித்து நமக்கும் அந்த மாதிரி காதில் விழுகிறதோ ஒலி என்று திகைத்த நாட்கள்.
மஹேந்திர பல்லவ அரசனின் சிவனடியார் வேஷம்,
நாகநந்தியின் கொடூரக் கண்கள்,சிவகாமியின் குளம்,
மணியன் சாரின் கைவண்ணம் ஒன்றுமே மறக்கமுடியாது.
அதுபோல் சுஜாதா சாரின் புத்தகங்கள்.
அவரின் எல்லா நாவல்களும் இல்லாவிட்டாலும்
முக்கால் சதவிகிதம் இருக்கின்றன,.அதுக்குத் தனிப்பதிவு தேவை. எல்லாவற்றிலும் ஒன்றிவிடுவதால் அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடுவது ப்ரம்மப் ப்ரயத்தனம்.
அப்புறம் நம்ம ராசநாராயண ஐயா.
ஒரு ஒரு பக்கமாக்ப் படிக்க வேண்டிய அரிய எழுத்துக்கள்.
மனசிலிருந்து வார்த்தைகள் பேசும் மொழிபோல் பொய்யில்லாமல் வரவேண்டும் என்று அய்யா சொல்லுவர்.
எதுக்கம்மா நாடகத் தமிழ்? இயல்பா எப்படி பேசுறீங்களொ அப்படியே எழுதணும். அப்போதான் அது படிப்பவருக்குப் போய்ச்சேரும் என்பார்.
அவர் எழுதின " கட்டுரைகளில்' இருந்து ஒரு பக்கம்.
மழை பற்றிய சொற்கள்.
1,ஊசித் தூற்றல்
2சார மழை(ஊதல் காற்றோடு பெய்யும் நுண்ணிய மழை)
3 சாரல்
4தூறல்(தூத்தல்)
5பூந்தூறல்
6,பொசும்பல்
7எறிதூரல்(பொடிக்கற்களால் மேலே எறிவது போன்ற தூறல்)
8தூவானம்,
9பொடிதூறல்,
10, ரவைத்தூறல்
11, எறசல்
12,பறவல் மழை
13பருவட்டு மழை,(,மேலெழுந்த வாரியாகப் பெய்வது)
14அரண்ட பருவம்( கண்டும் காணாம, தேவைக்குக்காணாத மழை)
15,மழை
16,துணை மழை --முதல் மழையைத் தொடர்ந்து மறுனாளோ அதர்கு அடுத்த நாளோ பெய்வது.
துணை மழை இல்லாவிட்டால் நிறைவு தராது. சாப்பாட்டின் போது இரண்டாம் தடவை சோறு வாங்கிக்கொள்ளுவது போல.//
எளிமையாக எல்லோருக்கும் பிடிக்கும் , அப்படியே அணைத்துக் கொள்ளும் எழுத்துக்கள்.
நகைச்சுவை எங்கும் பரவிக் கிடக்கும்.
அதற்குப்பிறகு
எஸ்.ஏ.பி சார்,
அவருடைய சின்னம்மா,இன்றே இங்கே இப்போதே
நான் மனத்தில் பதித்த நூல்கள்.
பிறகு , நாங்கள் எல்லோரும் படிக்க விரும்பியது,
மணியன், சேவற்கொடியோன், கொத்தமங்கலம் சுப்பு-கலைமணி.
இவர்கள் எல்லோரும் ஆனந்த விகடன் மூலம் எங்களைக் கட்டிப்போட்டவர்கள்.
இதய வீணை,
காதலித்தால் போதுமா--ரொமான்ஸை எங்களுக்கு அறிமுகப் படுத்தியவை.
தொடர்ந்து சேவற்கொடியோனின் உன் கண்னில் நீர்வழிந்தால் 19 64 வருடத்தின் இதயத்துடிப்பாக இருந்தது.
சுப்பு சார் கலைக்களஞ்சியம்.
நாவல்கள், கவிதைகள்,நாட்டுப்பாடல்கள், கட்டுரைகள், தொடர்கதைகள், சினிமா ,நடிப்பு என்று அவர் தொடாத துறையே கிடையாது.
பந்தநல்லூர் பாமா, தில்லானா மோகனாம்பாள்,ராவ் பகதூர் சிங்காரம் இவர்கள் எல்லொரும் எங்களோடு உலவிய காலங்கள் கிராமம்,வயல்,வரப்பு,இசை,நாட்டியம்,சதி,சூழ்ச்சி,சிருங்காரம்
எல்லை மீறிய மகிழ்ச்சி என்று மாறி மாறி எங்களை ஆட்டிப்படைத்தவர்.
அவருடைய செங்கமலம்,மோஹனா,எல்லோருமுயிரோடு உலவ உதவி செய்தவர் கோபுலு சார்.
சண்முகத்தின் அளகபாரம்,வண்டிமாடுகளின் துள்ளல்,மோஹனாவின் சுட்டும் நீண்ட விழிகள்.வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது என்று வாக்கியம் உண்டு.
அது கோபுலுவின் ஓவியங்களுக்குத் தான் பொருந்தும்..

அதையும் எழுத மிக நீண்ட பதிவு தேவை அசோகமித்திரன் சார் கதைகளுக்கும் அப்படித்தான். தேவன்,லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணனின் மலர்கள்,
எஸ்.வி.ஏஸ் அவர்களின் நகைச்சுவை கட்டுரைகள்.
வல்லிக்கண்னன், தமயந்தி,அருள்மொழிவர்மன்,
மும்தாஜ் யாசீன்,படுதலம் சுகுமாரன்,சுந்தர பாகவதர்,இவர்கள் புத்தகங்களும் உண்டு என் அலமாரியில்.
இன்னும் சேர்ந்து கொண்டு இருக்கின்றன. என்னுடைய (இன்னும் முற்றிய) முதுமை காலத்திற்காக சேர்க்கும் சொத்து.
கண்கள் நன்றாகத் தெரியவேண்டும்.

கீழே வரும் எழுத்தாளர்களும் அவர்கள் புத்தகங்களும்
வெவ்வேறு விதமான சுவையில் இலக்கணம்
பிறழாத தமிழில், எழுதி எப்போதாவது இவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமே என்று மனசார நினைக்க வைத்தவர்கள்.

பி.வீ ஆர்.
மாயாவி,
வி.ச.காண்டேகர்,கி.வா.ஜ
என்று கலைமகள் இதழில் வெளியான கதைகள்.
ஆர். சூடாமணியின் நாவல்கள்.
மனதுக்குப் பிடித்தவள்.... என்று ஒரு தொடர்.
இன்னும் மிச்சம் இருப்பவை ஆன்மீகப் புத்தகங்கள் .
முக்கூர் ெழுதிய குறையொன்றும் இல்லை -6 பாகங்களாக வந்தவை.
இராகவேந்திர மகிமை அம்மன் சத்தியநாதன் அவர்களால் எழுதப் பட்டது. அல்லல் படும் நேரம் இவைகளைப் படிப்பேன். மற்ற நேரமும் தான்"-))
அதே போல் இராமாயண, மஹாபாரதம்,பாகவதம்
திவயதேசங்கள் , ஸ்தல புராணங்கள் எண்று நிறைய
இருக்கின்றன.
படிப்பது என்னும் வழக்க்ம குறைந்தது,
பிளாகிங் ஆரம்பிததும் தான்.
நெட்டில் தான் படிக்கிறேனே,, என்று நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.
பொறுமையாக இந்தப் பதிவை வாசித்தவர்களுக்கு நன்றி.
பதிக்க சொன்ன சிவபாலனுக்கும் சேர்த்துதான்.
ஆங்கிலம் என்று பார்த்தால்
வீட்டில் இருந்து லஸ் கார்னருக்குப் போனவைகள்
1, Perry mason,
James hadley chase,
Alistair maclean,
Ian Fleming
Mills and boon,
Harvey comics--
Arthur Hailey
Irving wallace,
Robert Ludlum,
Clive Cussler,
Louis Lamour
Frederic Forsythe,
Desmond Bagley
Leon Uris
mostly light reading variety.
மீண்டும் நன்றி. 
சொற்பிழை பொறுத்துக்கோள்ளவேண்டும்.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...