Saturday, October 04, 2014

வழி,தங்குமிடம் ராமேஸ்வரம்


எல்லொருக்கும் இராமேஸ்வரம் என்பது ஒரு புண்ணிய யாத்திரை தலமாகத் தான் தெரியும். எனக்கு அப்படித்தான்.
இந்தப் பதிவு ஒரு பின்குறிப்பாக எழுதுகிறேன்.
ஒரு நாள் பயணமாகவே போய் விட்டு வரக்கூடிய இடம் தான். ஆனால் அங்கே தங்கி வந்தால் இன்னும் நிறைய இடங்களைப் பார்க்கலாம்.
மதுரையில் இருந்து நான்கு மணிநேரப் பயணம்.
ராமனாதபுரத்தில் நல்ல வசதியுடன் விடுதிகள் இருக்கின்றன.
அங்கே இறங்கி சேது விலிருந்து பயணத்தை ஆரம்பிக்கலாம்.
வைணவர்கள் சேது தீர்த்தத்தில் குளித்துவிட்டு அடுத்த நாள் ராமேச்வரம் அக்கினி தீர்த்ததில் குளிப்பார்கள்.
சேதுவில் சங்கல்பம் செய்து முன்னோர்களுக்கு நினைவாக கட்லில் குளித்து அங்கே வாழும் வசதி குறைந்தவர்களுக்கு நாம் அணிந்த் உடையோ ,அன்னதானமோ செய்யலாம்.
அங்கிருப்பவர்களே நமக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.

அங்கெ பக்கத்திலேயே ராமன் தபம் செய்த திருப்புல்லணை ஆதி ஜகன்னாதன் கொவிலுக்குப் போனால் மதிய சாப்பாடு உறுதி.
கடலுக்குக் குளிக்கப் போவதற்கு முன்னால் சொல்லிவிட்டால் போதும். சமைத்து வைத்துக் கொடுப்பார்கள். ஆஹா அந்தப் பசிக்கு அந்தப் பொங்கல் அமிர்தம் தான்.
இங்கு இராமபிரானுக்கு கடலரசன் சேதுப் பாலம் கட்ட வழி சொல்லிக் கொடுத்தானாம்.
கடலைப் பிளந்து இலங்கைக்குப் பாலம் அமைத்தால் கடலில் உள்ள உயிர்கள் அழியும், அதனால் மிதக்கும் பாலம் ஒன்றை நளன் என்னும் தேவ சிற்பியை வைத்துக் கட்டலாம், என்று யோசனை சொல்ல, இராமனும் நளனை
வேண்ட வானரங்கள் உதவியுடன் அதிகக் கனமில்லாத கற்களால் சேதுப்பாலம் அமைந்ததாம்.
அதனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அப்போது இன்னும் சிறப்பாக இயங்கி இருக்கிறது என்று எனக்குத் தெளிவாகியது.
பக்கத்தில் தேவிபட்டினம் என்னும் கடலோர கிராமத்தில் நவபாஷணம் என்னும் நவக்கிரக பரிகார தலம் இருக்கிறது.
கடலுக்குள் போய் ராமபிரான் ஸ்தாபித்ததாகச் சொல்லப்படும் கிரஹங்களைச் சுற்றி வந்து அர்ச்சனை செய்யலாம்.
அங்கேயும் தானம் செய்யும் வழக்கம் உள்ளது. நம் பின்னாலேயெ அவர்கள் குறி வைத்து வருவதைப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்

அங்கிருந்து நேரே ராமேஸ்வரம் தான். அங்கநிறைய தங்கும் விடுதிகள் வந்து விட்டன.
நாற்பது வருடங்கள் முன்னால்
நமக்கு பரிகாரம் செய்ய உதவியாக இருக்கும் சாஸ்திரிகள் வீட்டிலேயே தங்கவும், சாப்பிடவும் வசதி செய்வார்கள்.
இப்போது நமக்குத்தான் அந்த வசதி எல்லாம் போதாதே..
அதனால் (பண) வசதிக்கு ஏற்ப விடுதிகள் கிடைக்கின்றன.                                                                                                        
ஸ்ரீ ராமனாத ஸ்வாமி ஆலயத்துக்குள் 22 தீர்த்தங்கள் இருக்கின்றன.
எல்லாம் நாம் செய்த , செய்யப் போகும் பாப விமோசனம்,,(நிவர்த்தி) செய்யக் காத்துக் கொண்டு ,அந்தக் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுப்பதையே சேவையாகச் செய்யும் நண்பர்களோடு
தயார் நிலையில் உள்ளன.
எத்தனை உயர்ந்த சேவை.!!
பர்வதவர்த்தினி அம்மனும், இராமலிங்கமும் ஜோதியாகத் அவ்வளவு ஓளியோடு காட்சி தருகிறார்கள்,
அங்கெ இன்னும் கை நீட்டும்
காட்சி வரவில்லை.
பக்தியும் சுத்தமும் ஆன்மீகமும் இருந்தன.
ஏழ்மையும் இருந்தது.

இன்னோரு தடவை என்னை இராமேஸ்வரம் போக வைத்த தமிழ் மணத்துக்கு நன்றி..

Wednesday, October 01, 2014

1970 லிருந்து 83 வரை 6-27-2006







காப்டன் ஹாடாக்,டின் டின், ஸ்னொயீ ,கால்குலஸ் எல்லொரும் மகிழ்விக்க வந்தது ஆஸ்டரிக்ஸ் காலத்தில் தான். நான் இவர்களை நினைவு படுத்திக்கொள்வது ஒரே ஒரு காரணத்துக்காகத்தான்.
நன்றி மறக்கக் கூடாது.
1977,78 காலங்களில் மழைக்காலம் என்றால் மழை பெய்யும்!!!!1
அப்பொது செப்டம்பர் விடுமுறையும் சேர்ந்து கொள்ளும்.
பசங்க விளையாட வெளியே போக முடியாது. அது போல் ஒரு நச நசா மழை. எத்தனை நேரம் காரம்பொர்ட் விளையாட? எத்தனை நேரம் வேகவச்ச கடலையைக் கொறிக்க.?

சக்தியை செலவழிக்க ஒரு வழி வேணுமே.
அப்போது மவுண்ட் ரோடு தான் அடைக்கலம்.
கொஞ்ச நேரம் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யுட்.
மூன்று மாடிகளும் பார்த்து, ஒரு கூடை, ஒரு பிள்ளயார், ஒரு சிப்பி(எல்லாம் சேர்ந்து 30ரூபாயில் அடங்கி விடும்.)
அடுத்த படையெடுப்பு ஸ்பென்சர் கட்டிடம். அங்கே போய் இருக்கும் கடைகளைப்
பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல்---எல்லாம் பட்ஜெடுக்கு மேல் இருக்கும்.
அடுத்து நடந்து ஹிக்கின்பாதம்ஸ் வருவோம்.
நடுவில் கொறிக்க ஏதாவது உண்டு.
ஹிக்கின்ஸில் குழந்தைகள் பக்கம் இப்போது போலவே நல்ல புத்தகங்கள் இருக்கும்.
ஒன்றொன்றாகப் படித்து விட்டு கடைசியில் ஒரு மனதாக
லேடிபேர்ட் புஸ்தகம் ஓன்றும் (5ரூ) டின் டின் புஸ்தகம்(18ரூ) ஒன்றும் வாங்கி வருவோம்.
ஸ்பெசல் டிரீட் ஆட்டொவில் வீடு வருவதுதான்.
பிறகு வீடே கலகலப்பாகி விடும். முதலில் பெரிய பாட்டியிடம் வாங்கி வந்த பொருட்களைக் காண்பிக்க வேண்டும்.
பிறகு  ஆங்கிலம்  கற்றுத் தேர்ந்த சின்னப் பாட்டியிடம் சொல்ல வேண்டும்.
இருவரும் அவசியமான கேள்விகளைக் கேட்டு இவர்கள் மூவரும் பதில் சொன்ன பிறகுதான் படிக்கும் படலம்.
இதுபோல் சேர்ந்த புத்தகங்கள் பொக்கிஷங்கள்.
இவைகளைத் தவிர லெண்டிங் லைபிரரிப் புத்தகங்கள் மிஸ்டீரியசாகக் காணமல் போகும்.
டுயூ டேட் முடிந்து பள்ளிக்கூடம் திறந்த பிறகு, நான்  தானெ
இருப்பதை திருப்பி கொடுக்கப் போக வேண்டும்!

எங்க வீட்டு மூன்று தலை முறைக்கும் நாந்தான் லைபிரரி உமன். பெரிய பாட்டியோட வடுவூர் துரைசாமி,
மாமியாருடைய லக்ஷ்மி,தேவன், கல்கி புத்தகங்கள்,
என்னுடைய சிவசங்கரி,சுஜாதா, பி வி ஆர், சாவி
இதற்குப்பிறகு பசங்களோட புக்ஸ்.
இப்பவும் சொல்லுவார் அந்த லைபிரரி ஓனர்.
105 ருபா புஸ்தகம் வரவே இல்லைம்மா என்று.
நான் என்ன சொல்லுவேன்? புத்தகங்கள் பைண்டு செய்து ஸமத்தாக அலமாரியில் இருக்கிறது என்றா?
அதற்குப் பிறகு அவர் கடைக்கே நிறைய புத்தகங்களை
சும்மாவாகவே கொடுத்து சரி பண்ணி விட்டது.
அதுவும் இந்த மாதிரி புத்தகங்கள்,
லியான் யுரிஸ்,
ஹரால்ட்ராபின்ஸ்,
மரியோ பூசோ,
இர்விங் வாலஸ்,
ஆர்தர் ஹைலி,
இயன் fஃலெமிங்,
மேலும் சிலருடைய புத்தகங்களை கிலொ கண்க்ில் கொடுக்க வேண்டி வந்தது. அறிவு தானம் நல்லதுதானே1
அதனாலே பரவாயில்லை என்று நாங்களே சமாதனப்படுத்திக் கொண்டோம்.

வலையில் பதிவு மதுமிதா ஆராய்ச்சிக்காக

பெயர்----ஏழிசை நரஹரி*  (அச்சோ பாவம்)  5/24/2006
பதிவின் பெயர்----பொருனைக்கரையிலெ
பதிவு யுஆர்எல்--www.porunaikaraiyile.blogspot.com
மற்ற பதிவுகள்---www.naachiyaar.blogspot.com
---------------------------www.kurungudi-valli.blogspot.com(english)
பதிவு ஆரம்பித்த நாள்-----ஜனவரி 2006

பதிவு ஆரம்பிக்க உதவி------மற்ற பதிவுகளைப் படித்ததால்
தோன்றிய என்னுடைய எண்ணம், மற்றும் எழுத வேண்டும் என்ற ஆர்வம்.
இருக்கும் இடம்----------சென்னை, இந்தியா.
புனை பெயர்கள்-----------மனு,வல்லி.
எழுதும்போது கிடைத்தது---நல்ல நண்பர்கள்
மேலும் எதிர்பார்ப்பது.........நல்ல நட்பு வட்டம்
சாதிக்க நினைப்பது நிறைய பொருள் பொருந்திய எழுததுக்கள்
http://www.blogger.com/post-edit.g?blogID=21983712&postID=114846876869130724

Tuesday, September 30, 2014

கனவுத்தொழிற்சாலை மந்திரவாதிகள் 15/6/2006

இப்பொழுது என்னை விட்டுப் போகாதே பாடல் தேவ் ஆனந்த்
அன்னை என்பவள்   நீதானா  பானுமதி.
போகும் முன் உன்னை உற்று உற்றுப் பார்க்கிறேன் ஏனென்றே தெரியவில்லை ஜக்கம்மா.
சிங்கம் 13 தடவை பார்த்த படம்.
என்னுடைய     ரோல் மாடல் எல்லாவிதத்திலும்.
இந்த ஒருநாளை நானும் நீயும் ஒரு ஹாலிடேயாகக் கொண்டாடலாமே
நீங்க திரும்பி வந்தாச்சா மிஸ்.
அனைவரையும் பாடவைத்த  சௌண்ட் ஆஃப்  மியூசிக்
ஃப்ரொஃபெஸ்ஸர் ஹிக்கின்ஸுக்கு சவால் விடுத்து  கடைசியில் இருவரும் இணைந்த கதை.
ஆடிரி ஹெப்பர்ன்,கிரிகரி பெக்கின் 'ரோமன் ஹாலிடே' எத்தனையோ இதயங்களைத் தவிக்க வைத்தது.
இந்த மான் விழி சில சமயம் இவருக்கு பாம்பி என்ற மானை நினைவுக்குக் கொண்டு வருவதாகச் சொன்னவர்கள் ஏராளம்.இன்னும் இவர்களொடு ஏகப்பட்ட மந்திரவாதிகளால் கட்டுண்ட காலம்  நிறைய.   இப்பொழுது கொஞ்சம் அந்த உணர்ச்சிகளிலிருந்து விலகி வந்திருக்கிறேன்.  காலம் மாறிக், கனவுகள் மாறும்போது அவைகளில் நினைவுகளில் சேமிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...