Wednesday, June 28, 2006

கி.இராஜநாராயணன் அய்யா--2

அய்யாவும் போனுக்கு வந்து யார் என்று விசாரித்து விட்டு பேச ஆரம்பித்தார். அவ்வளவு எளிமையான பேச்சை நான் இதுவரை கேட்டது இல்லை.
எங்க அம்மா அப்பா ஊரு பேரு எல்லாவற்றையும் விசாரித்தவர் விவரத்தைக் கேட்டு வருத்தப்பட்டார்.
அதற்கப்புறம் அடிக்கடி கதை கேட்பதற்கே நான் போன் செய்வதும் அம்மாவும் அவரும் நடந்த நிகழ்ச்சிகளைக் கோர்வையாக சொல்வதும் மிகப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது.

அதன் பயன் ,அதுக்கப்புறம் நடந்த புத்தகக் கண்காட்சியில் அகரம் பதிப்பகத்தில் அய்யவுடைய நான்கு புத்தகங்களை வாங்கியதுதான்.

எல்லாவற்றையும் இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அம்மாவும் அய்யாவும் ஒரு நாள் மதியம் போன் செய்து
அடுத்த நாள் அவர்கள் சென்னைக்கு முத்தமிழ் விழா ஒன்றில் கலந்து கொள்ள வருவதாகவும், எங்க வீட்டுக்கு அப்படியே வரலாமா என்று கேட்டதும்,
எனக்குப் பேச்சே வரவில்லை.

இவ்வளவு பெரிய ம்னிதர்களோடுப் பேசிப் பழகி இருந்தால்தானே வார்த்தைகள் அருமையாக வெளியே வரும்?

வாங்க, கட்டாயம் வரணும் எனறு சொல்லி விட்டு மறுநாள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்தோம் நானும் எங்க வீட்டுக்காரரும்..

காலையில் தொலைபேசியில் உறுதி வேறு செய்து கொண்டேன். மனசு மாறிவிடப் போகிறதே என்றூ.
வந்தார்களம்மா இருவரும் . ஒரு வழக்கமான, அம்மா அப்பா வருகை போலத்தான் இருந்தது.
கணவதி அம்மாவின் பாசம்,அய்யாவின் வீட்டை சுற்றிப் பார்க்கும் அழகு எல்லாம் எனக்கு அதிசயமாக இருந்தது.
அவர்கள் என்ன சாப்பிட்டார்களோ என்னவோ என்று விசாரித்தேன். அய்யாவுக்கு நல்ல காப்பி போதும் சக்கரை கம்மியா என்று அம்மாவும், அவளுக்கு நல்ல பால் போரும் சக்கரையே வேண்டாம் என்று அய்யாவும் சொல்லி விட்டார்கள்.
அதற்குப் பிறகு எங்க வீட்டு மீனாட்சிதான் பேச்சைத்தன் பக்கம் இழுத்துக் கொண்டது. இப்படிக்கூட தனிமையாக ஒரு பிறவி உண்டா என்று சிரிப்பு.
எல்லாவற்றிற்கும் சிரிப்புதான்.
வாங்கின புத்தகங்கள் எல்லாவற்றிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்,. தான் பழகின சக எழுத்தாளர்கள் பற்றின சுவையான சம்பவங்களைச் சொன்னார். அம்மாவும் அப்போதைக்கப்போது கலந்து கொண்டார்கள்.
என் பிரமிப்பு நீங்கவே மேலும் ஒரு மணி நேரம் ஆனது

அவர்கள் பாண்டிக்குப் பயணம் புறப்பட வேண்டும். வீட்டுக்குப் போய் தோசை சுட வேண்டும் என்று பழகின ரொடீன் அன்றாட வாழ்க்கைக்கு வந்து விட்டார்கள்.
நானும் புத்தகங்களிருந்து கேட்க நினைத்து இருந்த ஒரு சந்தேகத்தைக் கூடக் கேட்கவில்லை.
அவர்களைப் பார்த்ததே பெரிய புண்ணியம் தான்.
அந்த இரண்டு மணி நேரமும் இரு வயது முதிர்ந்த இளமை நிறைந்த வாழ்க்கையின் ரகசியம் தெரிந்த
இரு நல்ல மனிதர்களைப் பார்த்துப் பழகியதுதான் எங்கள் வீட்டில் நிரவி இருந்தது.
எத்தனை முரண்பாடுகளை இருவரும் சந்தித்து
இருக்கிறார்கள்!!
வாழ்வின் கரடு முரடான பாதை எங்கும் பயணம் செய்து
அலுப்புக் காட்டாமல் வாழ்க்கயை ரசித்து ருசிப்பதே தலையாய கடமையாக, ஒரு தவமாக இயங்கும், யாரிடமும் தப்பையே கண்டுபிடிக்காமல் நிறைவையே காணும் இரு அற்புத மனிதர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது
மீண்டும் அவர்களைப் பார்த்துப் பேசும் நாளுக்காகக் காத்து இருக்கிறோம்.
அய்யா அவர்களிடம் அவரைப் பற்றி எழுதப் போகிறேன் என்றதும் உடனே மீனாட்சியைப் பற்றிய தன் எண்ணங்களை எழுதிக் கட்டுரையை ஆரம்பிக்கலாம் என்று சிரித்துக் கொண்டெ ஐடியா கொடுத்தார்.
ஒரு நல்ல மனிதரையும் அவரது குடும்பத்தையும் அடையாளம் காண்பித்துக் கொடுத்த எங்க அம்மாவுக்கு நன்றி..

7 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்ல மனிதர்களைப்பற்றிய நல்ல ரசிகையின் நல்ல பதிப்பு அதனால் ஏற்பட்ட மனத்தின் பாதிப்பு. படிக்க சுவையாக இருந்தது.இது மாதிரி நிறைய எழுதுங்கள்.இன்றைய சமூகத்திற்கு இது தேவை.அன்பன் திராச

வல்லிசிம்ஹன் said...

தி ர ச, வணக்கம்.அவர்கள் கதையில் எழுதும் எல்லாமே நிஜமாக நடந்ததுதானாம்.மனசின் வலி தெரிந்தவர்கள்.அதனால்தான் அவர்களுடன் மனம் ஒன்றுகிறது.அதிராத,அமைதியான தம்பதி.வழக்கமான உற்சாகம் இருந்து இருந்தால் 4,5 தடவையாவது அவங்க வீட்டுக்குப் போயிருப்பேன்.சத்சங்கம் வேணும் இல்லயா? அருமையான பின்னூட்டத்தற்கு நன்றி.

துளசி கோபால் said...

எல்லாம் பூர்வஜென்ம புண்ணியம்தான்.
நல்ல மனிதர்கள் நட்பு கிடைக்கிறதே ஒரு பாக்கியம்.

உங்களோடு சேர்ந்து நாங்களும் அந்தச் சந்திப்பை அனுபவிச்சோம்.

அப்படியே எனக்கும் ஒரு நல்ல காப்பி, சக்கரை கம்மியா:-)))

பரத் said...

நல்ல பதிவு

வல்லிசிம்ஹன் said...

நன்றி.பரத்.

கோவி.கண்ணன் said...

//வாழ்வின் கரடு முரடான பாதை எங்கும் பயணம் செய்து
அலுப்புக் காட்டாமல் வாழ்க்கயை ரசித்து ருசிப்பதே தலையாய கடமையாக, ஒரு தவமாக இயங்கும், யாரிடமும் தப்பையே கண்டுபிடிக்காமல் நிறைவையே காணும் இரு அற்புத மனிதர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது//
நிங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நாம் மனிதர்களைப் பார்க்கும் பார்வைக்கும் அவர்களின் பார்வைக்கும் வேறுபாடுகள் உள்ளது. எழுத்தாளர்கள் மனிதர்களை ஒரு 'கேரக்டர்' என்று பார்பதால் விருப்பு வெறுப்பின்றி பழகுவார்கள். தமிழ் இலக்கிய கதை உலகிற்கு கி.ரா அய்யா நல்ல சேவை செய்திருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு கோவி.கண்ணன்.
இயல்பாகவே ஒரு நல்ல தன்மை இருவருக்கும்.
மிகுந்த இங்கிதம்.

சமத்தான வெகுளித்தனம்.

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...